Welcome Guest! Have a informative day

பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்: ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

ஆத்தூர்: ஈரோட்டில் காலைக்கதிர் பத்திரிகை அலுவலகத்தில் புகுந்த ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம் கொலை மிரட்டல் விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆத்தூர் பகுதி பத்திரிகையாளர்கள், ம.தி.மு.க., நகர செயலாளர், ஆத்தூர் கிளை செயலாளர், தலைவாசல் ஒன்றிய செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இனிவரும் காலங்களில் இது போன்று பத்திரிகைகள் மீது தாக்குதல் இருக்கால் இருக்க நடவடிக்கை எடுக்க ‌ வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் இதனை வலியுறுத்தி ஆத்தூர் ஆர்.டி.ஓ., உதவியாளரிடம் மனு கொடுத்துள்ளனர்....